நோயாளார் காவு வண்டியினை மோதித்தள்ளிய காட்டுயானை : உயிர் தப்பிய 10க்கு மேற்பட்டவர்கள்!!

1398

ஒட்டிசுட்டான் பகுதியில்..

முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் பகுதியில் நோயாளர் காவு வண்டியினை காட்டு யானை மோதித்தள்ளியுள்ளது.

நேற்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மல்லாவி வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களை ஏற்றுக்கொண்டு மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியூடாக,

மாஞ்சோலை வைத்தியசாலை நோக்கி நோயாளர் காவு வண்டி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் நோயாளர் காவு வண்டியினை காட்டுயானை தா க் கி யு ள் ள து.

யானையின் தா க் கு த லி ல் நோயாளர் காவு வண்டி பகுதியளவில் சே தமடைந்துள்ளதுடன் நோயாளர் காவு வண்டியில் பயணித்த எவருக்கும் எவ்வித உ யிராபத்துகளும் நிகழவில்லை.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.