நாட்டில் தீவிரமடையும் கொரோனா தொற்று : மேலும் 201 தொற்றாளர்கள் அடையாளம்!!

627

கொரோனா..

நாட்டில் மேலும் 201 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களுள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 37 பேரும், மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து 24 பேரும், மீன்சந்தையுடன் தொடர்புடைய 140 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒருவர் உ யிரிழந்த நிலையில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போதைய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3625ஆக அதிகரித்துள்ளது.