நாடாளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது!!

562

நாடாளுமன்றம்..

நாடாளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் நாளைய தினமும் நாடாளுமன்றம் மூடப்படும் என நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றின் சுத்திகரிப்பு பணிகள் நாள் தோறும் நடைபெறும் என்ற போதிலும் இந்த இரண்டு நாட்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு பணியாளர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் கடமையாற்றிய காவல்துறைப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதியாகிருந்தது. எவ்வாறெனினும், இந்த வாரத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.