கொரோனா..
இன்றைய தினம் இதுவரையில் 457 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இன்றைய தினம் கிடைக்கப் பெற்ற பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மொத்தமாக 457 பேர் கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், 3 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இறுதியாக சற்று முன்னர் கிடைக்கப் பெற்ற பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.
இதில், எட்டு பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 156 பேரும் நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் 8870 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.