இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணம் பதிவு : அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!!

936

கொரோனா மரணம்..

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கொழும்பு 12ஐச் சேர்ந்தவர் எனவும், இவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 27ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.