மின்னல் தாக்கி கணவனும், மனைவியும் பலி!!

1167

மின்னல்..

அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (30.10.2020) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வி.ஈ.கமலராஜன் ஸ்தலத்திற்கு விரைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது.

அதற்குப் பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.