லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்!!

1190

விபத்து..

திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியின் நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (30.10.2020) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு அநுராதபுரம் சென்ற லொறியொன்று சிறுவன் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதிய நிலையில் சிறுவன் கானிற்குள் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்துள்ளார்.

இதேவேளை சிறுவனை காப்பாற்ற முற்பட்ட லொறியின் சாரதி லொறியை மறுபக்கம் திருப்பியமையினால் லொறியும் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் மஹதிவுல்வெவ – புபுதுபுர பகுதியைச் சேர்ந்த மதுரங்க மலித் (15 வயது) என்ற சிறுவனே காயமடைந்துள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.