இலங்கையின் நேற்று மட்டும் 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

962


கொரோனா தொற்று..



இலங்கைக்குள் நேற்று மாத்திரம் 633 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். முன்னதாக நேற்று மாலை 314 தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



இதில் 55 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 259 பேர் தொற்றாளிகளின் இணைப்புக்களில் இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவில் மேலும் 319 தொற்றாளிகளின் அறிக்கை வெளியானது.




இதில் 83 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 236 பேர் தொற்றாளிகளின் தொடர்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து நாட்டுக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 10424ஆகஉயர்ந்துள்ளது. 6123 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4282பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.