ஊரடங்கு தொடர்பில் வெளியான செய்தி!!

1948

ஊரடங்கு தொடர்பில்..

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் செயலணியில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை மற்றும்; குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.