வவுனியாவில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்!!

1067

குளத்திலிருந்து..

வவுனியா பொன்னரசங்குளம் ஈச்சங்குளம் குளப்பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை பொலிசார் இன்று (01.11.2020) காலை மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக தேசிய புலனாய்வுபிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதிக்கு சென்ற வவுனியா பொலிசார் மண் அகலப்பயன்படும் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டி தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கி மற்றும் 6 கைக்குண்டுகள் ,மற்றும் இரண்டு மகசின்களை பொலிசார் மீட்டனர். மீட்கப்பட்ட கைக்குண்டுகள் விசேட அதிரடிபடையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.