4 ஆண்டு காதல் : காதலனின் முடிவால் பரிதாபமாக உயிரைவிட்ட இளம் பெண்!!

2780

ஜாய்ஸ் பிரியா..

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், மனமுடைந்து த ற் கொ லை செ ய் து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியை சேர்ந்த தம்பதி பன்னீர்-மரியா. இவர்களுக்கு ஜாய்ஸ் பிரியா என்ற மகள் இருந்தார்.

ஜாய்பிரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்தார். இவரும் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்ற இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பரத், ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜாய்ஸ் பிரியா தனது வீட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் பொலிசார் இ றந்தவரின் உ ட லை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனது மகளை 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளைஞர் பரத் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஜாய்ஸ் பிரியாவின் தந்தை பன்னீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பொலிசார் தலைமறைவான பரத்தை தேடி வருகின்றனர்.