வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு..
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரின் அலுவலகம் கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள இவ் அலுவலகத் திறப்பு விழா வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
பௌத்த மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் வன்னிக்கான இணைப்பாளர் பாலித, முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால, மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,
பிரதேச செயலாளர்களான இ.பிரதாபன், க.சிவகரன், ந.கமலதாசன், ஜனக்க, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வா, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, அரச அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.