வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு!!

510


வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு கடமைக்கு வருமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர். இவ்வாறான நிலையில் பொலநறுவையில் உள்ள கொரோனா நோயாளர் வைத்தியசாலைக்கு வவுனியா வைத்தியசாலையில் இருந்து வைத்தியர், தாதியர்களை அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர், 10 தாதியர்கள் பொலநறுவையில் உள்ள கொரோனா வைத்தியசாலைக்கு இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.



இவர்கள் 14 நாட்கள் அங்கு கடமை புரிந்த பின்பு, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர். இவர்கள் மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு வந்த பின்னர் அடுத்த குழு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.