வவுனியா புளியங்குளத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 15 பேருக்கும் சுய தனிமைப்படுத்தல்!!

1237

புளியங்குளத்தில்..

வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 15 பேரும் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் – 19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது வெளி மாவட்டவர்களுடன் இணைந்து வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் உள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதாக நேற்று (31.10) பூசகர் உள்ளிட்ட 15 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் தனிமைப்படுத்தல் சட்ட மீறலின் கீழ் வாக்கு மூலத்தைப் பெற்ற பொலிசார் கடும் எச்சரிக்கையின் 15 பேரையும் விடுவித்தனர். அத்துடன் குறித்த 15 பேரையும் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில், கனகராயன்குளம் பகுதியில் இருவரும், வவுனியாவில் 8 பேரும், புளியங்குளத்தில் 5 பேரும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.