வவுனியா ஓமந்தை காட்டில் அரியவகை விலங்கு கண்டுபிடிப்பு!!

2323

அரியவகை விலங்கு..

வவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற ஒருவர் Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை இனம் ஒன்றை மரத்தில் அவதானித்த நிலையில் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

இலங்கைக்கு மட்டுமே உரித்தான தாசியா ஹாலியானஸ் Dasia halianus எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவ அரணை இனம் வன்னிக் காடுகளில் இருந்து வந்துள்ள போதும், மிக அரிய வகை உயிரினமாகவே உள்ளது. பெரும்பாலும் மரங்களில் இவ் உயிரினம் வாழ்ந்து வருகின்றது.

நாட்டின் ஒரு அரியவகை உயிரினமாக இது இருப்பதானால் 1970 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் காணப்படுவதை அவதானிக்கலாம். தற்போது இந்த அரிய வகை அரணை இனத்தின் புகைப்படம் சமூக வலைத்தலத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த உயிரினம் அண்மையில் வவுனியா – ஓமந்தைக் காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த அரியவகை உயிரினம் முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலையிலும் காணப்படுவதாக கருதப்படுகின்றது.

எனினும் அங்கு காணப்பட்ட இதுபோன்ற உயிரினங்களை வகைப்பிரித்து ஆய்வு செய்த முடிவில் இது இலங்கைக்கு மட்டும் உரித்தானது என உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் 8 செ.மீ நீளமுடைய இந்த தனித்துவம் மிக்க உயிரினம் மற்றைய அனைத்து சகோதர இனங்களிடமிருந்தும் வேறுபட்டது.

உடலின் நடுப்பகுதியில் (22-24) குறைந்த எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட முதுகெலும்பு வரிசை செதில்களும் உள்ளன. இந்த உயிரினம் பல்லேகம, தம்புல்ல, பொலன்னறுவ, பக்கமுன, ஹொரன, அனுராதபுரம், கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட மண்டலத்திலிருந்து அரிதாக அறியப்பட்டவை.

இந்த உயிரினம் அரிதாக காணப்பட்ட நிலையில் 1970 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணயத்தாளில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.