அமெரிக்க தேர்தலில் தமிழர் ஒருவர் அபார வெற்றி!!

985

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நால்வர் வெற்றிபெற்றுள்ளனர்.

அதிலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அமோக வெற்றிபெற்றிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புதுடில்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். கடைசி அறிக்கைகள் வந்தபோது, ​​அவர் கணக்கிடப்பட்ட மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதத்தைப் பெற்றிருந்தார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி முதன் முதலில் 2016 ல் பிரதிநிதிகள் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வரையில் ஜோ பைடன் முன்னிலைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.