அமெரிக்காவில் நேற்று புதிதாக இனங்காணப்பட்ட 100,000 கொரோனா தொற்றாளர்கள் : பேரழிவை நோக்கிச் செல்லும் நிலை!!

582

அமெரிக்காவில்..

ஒரு தொற்றுநோயின் நிழலில் ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை அறிய முழு உலகமுமே காத்திருந்த நிலையில்,நேற்றையதினம் 100,000 ற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் கண்டறியபப்பட்டுள்ளனர்.

கண்ணாடி மற்றும் முக கவசங்கள் அணிந்து சுகாதார நடைமுறைகளுடன் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்த போதும் புதிய பல கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் இனம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவைப்படுகிறது. கொவிட் 19 தடுப்பூசியின் தேவை மிகவும் அவசியமானது. ஆனால் அது நம் அனைவரையும் பாதிக்கும் மோசமான பாதிப்புகளை சரிசெய்யாது.

வறுமை, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்றவற்றிற்கு தடுப்பூசி எதுவும் இல்லை. இந்த துன்பங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பு அவசரமாக தேவை என அமெரிக்காவின் உயர்மட்ட சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.