வவுனியா கனகராயன்குளத்தில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் : பொலிஸார் விசாரணை!!

1226

கனகராயன்குளத்தில்..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று(06.11.2020) மதியம் வாகனத்திலிருந்து அநுராதபுரம் பகுதியினை சேர்ந்த சோளம் வியாபாரி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கனகராயன்குளம் பகுதியில் பட்டா ரக வாகனத்தின் முன்பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த நபர் வாகனத்தில் சோளம் விற்பனைக்காக வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மீட்கப்பட்ட நபரின் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.