காதலனை கண்மூடித்தனமாக நம்பிய காதலி : நடந்த விபரீதம்!!

27956

பிரியா..

காதலனை நம்பி வாழ்க்கையை இழந்த பெண் கலெக்டர் அலுவகம் முன்பு தீ க் கு ளி க் க மு யற்சி செ ய் த சம்பவம் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் பிரியா(30) தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் சேலம் செட்டிச்சாவடி காட்டுவளவு பகுதியை சேர்ந்த கலைச்செல்வன்(30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிர காதல் இருந்து வந்தது.

அந்த சமயத்தில் பிரியா 2 முறை கர்பமாகி அதனைக் கலைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக காதலர்களுக்கு இடையே 3 மாதமாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் கலைச்செல்வனுக்கு வீட்டில் வேறு பெண்ணை பார்த்து நிச்சயம் நடந்தது.

கலைச்செல்வன், இவரது அப்பா ராஜ் என்பவர், திமுக ஊராட்சி துணை செயலாளராக உள்ளார். இதனை அறிந்த பிரியா அம்மாபேட்டை காவல் நிலையத்தில் காதலன் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு கலைச்செல்வனுக்கு அவசர அவசரமாக மறுநாளே கல்யாணத்தை முடித்துள்ளனர் அவரது குடும்பத்தினர். இதனால் அ திர்ச்சியும் ஆ த்திரமும் அடைந்த பிரியா, சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

பிறகு திடீரென கையில் கொண்டு வந்திருந்த ம ண்ணெண் ணையை த ன் மீ து கொ ட் டி தீ க் கு ளி க் க மு யன்றார். அப்போது அவரை த டுத்த போலீசார் அவர் கையில் வைத்திருந்த கடிதத்தை வாங்கி படித்தனர்.

அதில் அம்மாபேட்டை போலீசார் கலைச்செல்வனிடம் பணம் வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு பிரியாவை சமாதானப்படுத்திய போலீசார் அவரிடம் தொடர்ந்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.