வவுனியாவிற்கு வருகை தந்த பல அமைச்சர்கள் : குண்டு செயலிழப்பு பிரிவினர் உட்பட பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!

1049

வவுனியாவிற்கு..

கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக்கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் குண்டு செயலிழப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் பிரிவினர் ஆகியோரினால் மாவட்ட செயலகத்தின் பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கூட்டம் இன்றையதினம் (07.11.2020) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல ஆகியோர் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

மேலும் குறித்த கூட்டத்தில் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்ட அரச அதிபர்கள் , பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.