கணவனை விவகாரத்து செய்து அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி : குவியும் பாராட்டுக்கள்!!

4932

குவியும் பாராட்டுக்கள்..

இந்தியாவில் விவகாரத்து கொடுத்து கணவரை அவரது காதலியுடன் சேர்த்து மனைவி சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின், போபாலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அவரது கணவர், தான் காதலியை திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். இதனால் தனது மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே காதலியுடன் வாழ நினைத்துள்ளார்.

இது சட்டப்படி நியாயம் இல்லை என்பதால், மனைவி விவாகரத்து கொடுக்க நினைத்துள்ளார். இதையடுத்து, கணவருக்கு விவாகரத்து கொடுத்து காதலியை திருமணம் செய்ய உதவியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், அந்தப் பெண்ணின் முடிவை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து,

பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் கணவருக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.