இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!

509

கொரோனா..

கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹரகம அபேக்சா புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்ததன் பின்னர் மேற்கொண்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது குறித்த நபருக்கு கொவிட-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது.

லியூகேமியா மற்றும் சுவாசப்பையில் ஏற்பட்ட கோளாறு என்பனவே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த மரணம் கொவிட்-19னால் ஏற்பட்ட மரணம் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளது.