இலங்கையில் நேற்று 635 கொரோனா நோயாளர்கள் பதிவு : 5 பேர் மரணம்!!

495

கொரோனா நோயாளர்கள்..

இலங்கையில் நேற்றையதினம் மொத்தமாக 625 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 15340 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று இறுதியாக கிடைக்கப் பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் 316 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட் தொற்றினால் 45 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியிடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி வரையில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.