இலங்கையில் இனிமேல் 55 வயதுக்குப்பின் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவே முடியாது : யோசனை முன்வைப்பு!!

583

55 வயதுக்குப்பின்..

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை உகவங்கப்படலாம் என்று அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 19ஆவது அரசமைப்பு திருத்தத்தில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதிபெறும் குறைந்த வயதெல்லையாக இருந்த 30 வயது, 36ஆக மாற்றப்பட்டது.

இருப்பினும் 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்த வயதெல்லையை மீண்டும் 30ஆக மாற்றியுள்ளார்.

எனினும், தற்போதைய அரசியலைமப்பில் அதிகூடிய வயதெல்லை என்று குறிப்பிட்டிருக்கவில்லை. இந்தநிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி அரசு கருத்து வெளியிட்டு வருகின்றது.

இதில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் அதிகூடிய வயதெல்லையை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த யோசனைக்கு அரச உயர்பீடமும் இணங்கியுள்ளது என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

-தமிழ்வின்-