இலங்கைக்குள் இதுவரை 612 பொலிஸார் கொரோனாவால் பாதிப்பு!!

613

கொரோனா..

பொலிஸ் திணைக்களத்தில் பரவி வரும் கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 612 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் 145 விசேட அதிரடிப் படை உறுப்பினர்களும் அடங்குகின்றனர் எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாத்திரம் 91 பொலிஸாருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.