இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து!!

513

புகையிரத சேவை ரத்து..

இரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளிலேயே பயணிகள் புகையிரத சேவை ரத்து செய்யப்படுவதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க விடுமுறை தினங்களான வார இறுதி நாட்களில் இவ்வாறு பயணிகள் புகையிரத சேவைகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ற போதும் எதிர்வரும் 16ஆம் திகதி வழமை போன்று பயணிகள் புகையிரத சேவை நடைபெறும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.