வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளருடன் வன்னி இராணுவ கட்டளைதளபதி பிரியந்த பெரோரா சந்திப்பு!!

770

பிரியந்த பெரோரா..

புதிதாக கடமையினை பொறுப்பேற்ற வன்னி பிராந்திய புதிய இராணுவ கட்டளைத்தளபதி பிரியந்த பெரோரா மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று 13.11.2020 காலை மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வன்னியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பாக வன்னி பிராந்திய புதிய இராணுவ கட்டளைத்தளபதி பிரியந்த பெரோராவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,

வன்னியில் உள்ளது போன்றே நாடு முழுவதும் இராணுவத்தினர் உள்ளனர். கொரோனா தொற்று தற்போதைய தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்காக கொழும்பு முழுவதிலும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.