பிறந்தநாளில் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலி!!

883

மராட்டிய மாநிலத்தில்..

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியானதுடன், ஏழு பேர் காயங்களுடன் உயிர் தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

புனே-பெங்களூர் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை சதாரா என்ற பகுதி அருகே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பாலத்தின் மீதிருந்து, 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் மதுசூதன் கோவிந்தன் நாயர் (42), அவரது மனைவி உஷா மதுசூதன் நாயர் (40), இவர்களின் மகன் ஆதித்யா மதுசூதன் நாயர் (23) ஆகியோருடன், உறவினர்களான சாஜன் நாயர் (35) மற்றும் அவரது மூன்று வயது மகன் ஆரவ் ஆகியோரும் மரணமடைந்துள்ளனர்.

இவர்களுடன், வாகன சாரதி உட்பட 7 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். மதுசூதனன் நாயரின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் உல்லாசப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்து புறப்பட்டுள்ளனர்.

மதுசூதனனின் சகோதரர், கேரளாவில் வசிக்கும் சோமசேகரனுக்கும் சனிக்கிழமையே பிறந்தநாள் என்பதால், சகோதரனை வாழ்த்த அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களும் முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மதுசூதனன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை பொலிசார் சோமசேகரனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை தெரிவித்த போது மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு, மும்பையில் இருந்து கோவா பயணம் மேற்கொண்ட நிலையிலேயே, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.