வவுனியாவில் அஸ்வின்யா ஜெயந்தன் 196 புள்ளிகளை பெற்று முதலிடம்!!

1598

அஸ்வின்யா ஜெயந்தன்..

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளது. பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில்,

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவி அஸ்வின்யா ஜெயந்தன் 196 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்களான விசேட வைத்திய நிபுணர் ஜெயந்தன் தம்பதியினரின் மகளான இவர் 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடந்த பரீட்சையில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அஸ்வின்யாவிற்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.