வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 62 மாணவர்கள் சித்தி பெற்று சாதனை!!

1394

விபுலானந்தா கல்லூரியில்..

வவுனியா, பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் 62 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இருந்து தோற்றிய 160 மாணவர்களில் 62 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதில் மயூரன் கிரிஷிகன் என்ற மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.