வவுனியா ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் மூவர் சித்தி!

1124

ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தில்..

வவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சையில்  மூன்று  மாணவிகள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். சூ.மிதுர்சிகா 179, ம.மதுசுஜா -168, அ.சந்தியா -166 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் பாடசாலையில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சித்தி வீதம் 79%.

இம் மாணவர்களை வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்களான ர.சாதனா, டிக்சன், மற்றும் சக ஆசிரியர்களையும்,விசேட வருகை வளவாளர்களையும், பெற்றோர்களையும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.