வவுனியா பாவற்குளம் படிவம்-3 இல-9 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் ஐவர் சித்தி!

1048

ஐவர் சித்தி..

நேற்று  வெளியிடப்பட்ட தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை-2020 பெறுபேறுகளின்படி வவுனியா பாவற்குளம் படிவம்-3 இல -9கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் 05 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று செட்டிகுளம் கோட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவர்களில் 05பேர்  வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்ததுடன் மேலும் ஐவர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இப்பாடசாலையில்  கடந்த வருடமும் நால்வர் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர் விபரம்
S.சன்ஜெய் – 173
P.அஸ்வி – 173
I.சாருசா – 166
S.கிசோந்தன் – 161
P.துரிசன். – 160

ஏனைய 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் விபரம்
K.தர்சிகா. – 158
P.வட்சாயினி. – 153
I.ரோகித்மிரால் – 144
S.சன்சிகா – 135
C.T.சந்தானநாயகி -122

அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம்
சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.