வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைப்பு!!

1058


தமிழ் விருட்சம்..



வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுக்கும் அமைப்பான தமிழ் விருட்சம் அமைப்பின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் சிறுவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.



குறித்த தமிழ் விருட்சம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்ளை வழங்கி வைத்து ஏழைக்குடும்பங்கள் வாழ்வில் முன்னேற பல உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் லால் விஜேரத்ன, இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகனேஸ்வர சர்மா,


சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, நகரசபை உப நகரபிதா குமாரசாமி, நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், நகரசபை செயலாளர் இ.தயாபரன், தனியார் போக்குவரத்து சங்க தலைவர் இராஜேஸ்வரன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் சி.ரவீந்திரன்,

ஓய்வு பெற்ற அதிபர் க.சிவஞானம் , ஓய்வு பெற்ற கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன், ஓய்வு பெற்ற அரச. உத்தியோகத்தர் தி.மகேந்திரராஜா, திடீர் மரணவிசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் மற்றும் வர்த்தகர்கள்,


பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.