கிடாச்சூரி பகுதியில்..

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மரக்கடத்தலை புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் முறியடித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

வேலங்குளம் செங்கல்படையில் இருந்து கல்மடு ஊடாக நெளுக்குளம் பகுதிக்கு முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக புளியங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று நள்ளிரவு குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது காட்டுப்பகுதியிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட முதிரை மரக்குற்றிகளும் , ஜீப் வாகனமும் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.






