கோர விபத்தில் இருவர் படுகாயம்!!

1213

விபத்து…

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் டிப்பர் வாகனமொன்றுடன் முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (27.11.2020) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் சென்றவர்களே படுகாயமடைந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – மட்டிக்களி, ராஜவரோதய சதுக்கம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் ஜதுர்ஷன் (19 வயது) மற்றும் உவர்மலை மத்திய வீதியைச் சேர்ந்த ஜீவராசாகலை நேசன் (24 வயது) ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.