ஆற்றில் விழுந்து..

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை -ஸ்ரக்ஸ்பி தோட்டப்பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் ஆற்றில் விழுந்து இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த நபர் சாமிமலை -ஸ்ரக்ஸ்பி தோட்டப்பகுதியினை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் குடும்பஸ்தரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பல மணி நேரம் கழித்து அவர் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேடிய போது ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.





