இடைவிடாத மழை..
வவுனியாவில் இருளுடன் கூடிய காலநிலை நிலவி வருவதுடன் நேற்று இரவு தொடக்கம் இடைவிடாத மழை பெய்த வண்ணமுள்ளது.
கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து இன்றும் (02.12) நாளையும் (03.12) திருகோணமலை – வவுனியா ஊடாக மன்னாரை சென்றடையவுள்ளது.
இதன் தாக்கமாக வவுனியாவில் பல இடங்களில் இருட்டுடன் கூடிய காலநிலை நிலவி வருவதுடன் இடைவிடாது மழையும் பெய்த வண்ணமுள்ளது.
நேற்று (01.12.2020) மாலை சிறிதளவிலான மழை வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் இன்று (02.12) அதிகாலை தொடக்கம் இடைவிடாது மழை காணப்படுகின்றது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் பல பகுதியில் இருளுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
தொடர் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர் மழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.