தும்பிக்கையை தடவிய ஐரோப்பிய பெண்ணை ஏறி மிதித்த யானை!!

476

Elephantஉடவலவ தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றிருந்த பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி காட்டு யானை தாக்கியத்தில் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்சார வேலிக்கு அந்தப்புறம் இருந்த யானைக்கு உணவு வழங்கி அவர் யானையின் தும்பிக்கையை தடவியுள்ளார். இதனையடுத்து யானை அந்த பெண்ணை தாக்கியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டுப் பெண் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து சென்றிருந்த 37 வயதான செப்புலிம் கஸ்சேதோம என்ற பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

வனவிலங்கு சரணாலயத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த இந்த பெண் எச்சரிக்கையையும் மீறி யானைக்கு உணவை கொடுத்து அதன் தும்பிக்கையை தடவியுள்ளார்.

யானை பெண் தாக்கி விட்டு திரும்பி செல்லும் போது அந்த பெண் கீழே விழுந்துள்ளதுள்ளதுடன் அவரை யானை மிதித்துள்ளதாக கூறப்படுகிறது.