பேய் விரட்ட மாணவியின் கால்களில் சூடு வைத்த ஆசிரிய ஆலோசகர்!!

308

suspentedஹொரவபொத்தனை பிரதேசத்தில் பேயோட்டுவதாக கூறி 17 வயதான மாணவியின் கால்களில் தீ காயங்களை ஏற்படுத்திய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வரும் தர்மசிறி ஜயலத் என்ற இந்த நபர் மந்திரங்கள் மூலம் பேயோட்டும் வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

17வயதான மாணவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி அதனை விரட்டுவதாக பெண்ணின் கால்களில் சூடு வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து கொப்பிட்டிகொல்லாவ வலய கல்விப் பணிப்பாளர் அந்த நபரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.

அதேவேளை தீக்காயங்களுக்கு உள்ளான இளம் பெண், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உதவியுடன் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.