வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட கொட்டகை மீது முறிந்து வீழ்ந்த மரம்!!

1492

முறிந்து வீழ்ந்த மரம்..

புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கொட்டகை சேதமடைந்துள்ளது.

போராட்ட கொட்டகை அமைந்துள்ள இடத்தில் இருந்த மரம் ஒன்றின் கிளை போராட்ட கொட்டகை மீது இன்று(03.12.2020) அதிகாலையில் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கொட்டகையின் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதுள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் நேற்று இரவு குறித்த கொட்டகையில் தங்களது வீடுகளுக்கு சென்றிருந்தமையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

வீழ்ந்த மரக் கிளைகளை அரச உத்தியோகத்தர்கள் அகற்றி வருகின்றனர்.