வவுனியாவில் நிலவும் சிரற்ற காலநிலையினால் முறிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!

837

முறிந்து வீழ்ந்த மரம்…

வவுனியாவில் நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட உக்குளாங்குளம் பாண்டியன் வீதியில் நின்ற மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

முறிந்து வீழ்ந்த மரத்தினால் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன் சில மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றும் பணியில் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டிருந்தனர்.