மாணவியை வகுப்பறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மாணவன் : கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி!!

13644

குப்பறையில் வைத்து…

ஆந்திராவில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவிக்கு சக மாணவன் வகுப்பறையில் தாலி கட்டிய வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து சென்றனர்.

இருப்பினும் இந்த பள்ளி திறப்பு காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு (பிளஸ் 1) படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே சக மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இதை மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, புகைப்படங்கள் பள்ளி நிர்வாகத்திற்கு சென்றது.

இதன்பேரில் திருமணம் செய்து கொண்ட 2 பேரையும், மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொரு மாணவனையும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.