வவுனியா புதுக்குளம் நீர்த்தேக்கத்தை பார்வையிடச் சென்ற மாணவன் மாயம் : தேடுதல் பணி தீவிரம்!!

4829

மாணவன் மாயம்..

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேற்றையதினம்(05.12.2020) மாயமாகியுள்ளார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது.

இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் எனும் பதினெட்டு வயது இளைஞர் தனது நண்பர்களுடன் நேற்றையதினம் மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீரினுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், காணாமல் போன இளைஞனை இன்றும் எட்டு மணி தாெடக்கம் கடற்படையினர், இராணுவம், மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்தும் தீவிரமாக தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.