வவுனியா செட்டிகுளத்தில் 18 வயது இளைஞன் அதிரடியாக கைது!!

2544

செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுவாகை பகுதியில் இன்று (12.12) அதிகாலை கேரளா க.ஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிகுளம் பகுதியில் அதிகரித்து வரும் போ.தைப்பொருள் பாவனையினை தடுக்கும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் துட்டுவாகை பகுதியில் கேரளா க.ஞ்சாவுடன் இளைஞன் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

இதன் போது 250கிராம் கேரளா க,ஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் அப்பகுதியினை சேர்ந்த 18வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.