தொற்று நீக்கும் நடவடிக்கை..
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து நோயாளர்களை ஏற்றிச் செல்லும் நோயாளர் காவு வண்டிகளுக்கு வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி, 1990 அவசர நோயாளர் காவு வண்டி என்பன மருந்து வீசி தொற்று நீக்கம் செய்யப்பட்டது.