வவுனியா மாவட்டம் முடக்கப்படும் அபாயத்தில்? : கொரோனா தொற்று சமூக மயமானதா?

3202

கொரோனா..

வவுனியா மாவட்டத்தில் இன்று (14.12.2020) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது தாய்க்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இந் நிலையில் அக்கிராம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு பலரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் இ்ன்றையதினம் (14.12.2020) காலை வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை , மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் வவுனியாவில் இன்று மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் வவுனியாவை சேரந்த மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குளி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி, கந்தக்காடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஆகிய மூவரே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவார்கள்.

சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குளி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவருகின்றது.

இதன் காரணமாக வவுனியாவில் கோவிட் -19 சமூக மயமடைந்துள்ளதா? என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகின்றது.