வவுனியா நகரின் முக்கிய பகுதி சற்றுமுன் முடக்கம் : அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!!

5407

முக்கிய பகுதி முடக்கம்..

வவுனியா கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் இன்று (14.12.2020) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந் நிலையில் புதிய சாளம்பைக்குளம் கிராமம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு பலரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் இ்ன்றையதினம் (14.12.2020) காலை வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் இந்நிலையில் வவுனியாவில் இன்று(14.12.2020) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் வவுனியாவை சேரந்த மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி , கந்தக்காடு இரானுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கர்பிணிப் பெண் என்ற மூவரே கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவார்கள்.

சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவருகின்றது.

இதன் காரணமாக வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை இன்று (14.12) இரவு முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அக் கிராமத்தினை சேர்ந்த மக்களிடம் சுகாதார பிரிவினர் நாளையதினம் (15.12) பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

கற்குழி பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வவுனியாவில் CCTMS பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.