வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக கூட்டமைப்பின் சு.ஜெகதீஸ்வரன் தெரிவு!!

1135

சு.ஜெகதீஸ்வரன்

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோல்வியை தழுவியிருந்தது.

அந்தவகையில் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறெஞ்சன் தலைமையில் இன்று(16.12.2020) இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சு.ஜெகதீஸ்வரனும், சுதந்திரகட்சி சார்பில் ஏற்கனவே தவிசாளராக பதவி வகித்த ஆ.அந்தோணியின் பெயரும் முன்மொழியப்பட்டது.

தெரிவிற்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) 10 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும் ஈபிஆர்எல்எப் 03, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 01, முஸ்லிம் காங்கிரஸின் 01,உறுப்பினரும் வாக்களித்தி்ருந்தனர்.

சுதந்திரகட்சியின் வேட்பாளரான அந்தோணி 06 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தார். அவருக்கு அந்த கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். பொதுஜனபெரமுனவின் ஒரு உறுப்பினர் நடுநிலைமை வகித்திருந்தார்.

இந்நிலையில் மூன்றுவருடங்களின் பின்னர் வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சு.ஜெகதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.