த ற்கொ லைக்கு முன்னர் பல மணி நேரம் மாமனாருடன் பேசிய சித்ரா : அழிக்கப்பட்ட ஆதாரம் மீட்கப்பட்டது எப்படி?

5612


நடிகை சித்ரா..



சித்ரா உ யிரிழப்பதற்கு முன்னர் பல மணி நேரம் மாமனாருடன் போனில் பேசியுள்ள நிலையில் அந்த ஆடியோ ஆதாரங்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.



பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் த.ற்.கொ.லை விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 9ஆம் திகதி சித்ரா தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை பார்த்ததும் ஹேமந்த்தும், விடுதி ஊழியர்களும் அ திர்ச்சியில் உ றைந்திருக்கின்றனர்.




உடனடியாக சித்ராவை ஹேமந்தும் விடுதி ஊழியரும் சேர்ந்து கீழே இறக்கி முதலுதவி அளித்திருக்கின்றனர். பின்னர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.


ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சித்ராவைப் பரிசோதித்த பிறகுதான் அவர் உ யிரிழந்தது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், சித்ரா ஹேமந்த் ஆகியோரின் செல்போன்களைப் ப றிமுதல் செய்து விசாரித்தோம். சைபர் கிரைம் பொலிசாரின் உதவியோடு, அந்த இரண்டு செல்போன்களிலிருந்து சில தகவல்கள் கிடைத்தன.


அதில் சித்ராவும் ஹேமந்த்தின் அப்பாவான ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ எங்களுக்குக் கிடைத்தது. போனில் இருந்து அது அ ழிக்கப்பட்ட நிலையிலேயே சைபர் கிரைம் மூலம் மீ ட்டெடுத்தோம். இருவரும் வெகுநேரம் பேசியிருக்கின்றனர்.

அதில்தான் சித்ரா, ஹேமந்த் தொடர்பான முக்கியத் தகவல்களைக் கூறியிருந்தார். அந்த ஆடியோ அடிப்படையில் விசாரித்த பிறகுதான் ஹேமந்த், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதைச் சொல்லத் தொடங்கினார்.

அறைக்கு வந்த பிறகு சித்ராவைப் பார்த்து ஹேமந்த் கூறிய வார்த்தைகள் அவரைக் க டும் ம னவே தனையில் தள்ளியிருக்கின்றன. அதன் பிறகுதான் சித்ரா, த.ற்.கொ.லை மு டிவை எடுத்திருக்கிறார் என கூறியுள்ளார்.