இலுப்பையடி பகுதியில்..
வவுனியா இலுப்பையடிப்பகுதியில் கெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ரு.ளை விற்பனை செய்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கை து செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் கெ.ரோ.யி.ன் விற்பனை இடம்பெற்றுவருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கெ.ரோ.யி.னை கொள்வனவு செய்வதற்காக பொலிசாரால் திட்டமிடப்பட்டு நபர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பொலிசாரால் அனுப்பப்பட்ட நபர் போ.தை.ப் பொ.ரு.ளை கொள்வனவு செய்ததுடன்,விற்பனை செய்த நபரை பொலிசாரிடம் அடையாளப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பொலிசார் குறித்த நபரை கைது செய்ய முனைந்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் கு ழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.
கெ.ரோ.யி.னை விற்பனை செய்ததாக ச ந்தேகிக்கப்படும் நபர் தான் ஐயப்பன் விரதம் அனுஸ்டித்துவருவதாகவும், போ.தை.ப் பொ.ரு.ள் விற்பனையில் ஈடுபடவில்லை என்றும் தன்னை கைது செய்யவேண்டாம் என்றும் பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார்.
இதனால் குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியதுடன், கு ழப்பமான நிலையும் ஏற்ப்பட்டிருந்தது. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேலும் போ.தை.ப் பொ.ரு.ள் இருக்கலாம் என்ற ச ந்தேகத்தில் வவுனியா சதோசவிற்கு பின்பான பகுதியில் பொலிசாரால் தே.டு.த.ல் நடாத்தப்பட்டது.